-
Workshop on Tamil Computing
எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயமும், இந்திய மொழிகள் நடுவண் நிறுவன மொழித் தரவுத்தொகுப்புச் சேர்த்தியமும் இணைந்து ”தமிழ்க் கணினிமொழியியல்” பயிலரங்கை 11 நாட்கள் நடத்தி வருகிறது. இதன் துவக்கவிழா எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் 20ந்தேதி காலை 10 மணிக்கு நடைபெற்றது. தலைமை உரையை எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர், முனைவர் மு.பொன்னவைக்கோ அவர்கள் ஆற்ற, மைசூர் சிஐஐஎல் இயக்குநர் முனைவர் எல்.இராமமூர்த்தி மையக் கருத்துரை வழங்கினார். எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் சிறப்புரையை அரசு முதன்மை செயலாளர் திரு.ம. குற்றாலிங்கம் அவர்கள் ஆற்றினார்கள். கணித் தமிழ்ச்சங்க தலைவர் ஆண்டோ பீட்டர், முனைவர் ந.தெய்வ சுந்தரம், மணிமணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இப்பயிற்சி பட்டறையில் தமிழ்க்கணினி கருத்துரை ஆற்ற 28 அறிஞர்கள் கலந்து கொள்கின்றனர். 100 பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.
date : 20-01-2012